ஷேகே இல்லாத பாதை திசைமாறுமே

ஷேகே உம் பாதையில்
சீர் கண்டு வாழ்கிறோம்
ஷேகென்று உம்மைத்தான்
உளமாற ஏற்கின்றொம் ஷேகே
(ஷேகே)

ஷேகே இல்லாத பாதை
திசை மாறுமே
நேசம் உம் பாசம் கண்டால்
நிலை பேறுமே
உணர்விலே உயர்ந்து நாம்
உளமாறப் போற்றுவோம் ஷேகே
(ஷேகே)

மேகம் படர்ந்த வானில்
நிலவில்லையே
குரு கண்டிராத கல்பில்
நிறைவில்லையே
இறைவனின் நாட்டமே
எமக்கும்மை ஈர்த்த ஷேகே
(ஷேகே)

தரீக்கா வழிமுறைதான்
நிறைவாகுமே
ஷேகே உம் நடைமுறைதான்
வழிகாட்டுமே
அகமெல்லாம் குளிர்ந்து நாம்
வரவேற்று மகிழ்கிறோம் ஷேகே
(ஷேகே)

உம் பாதம் சுமந்து நாங்கள்
நிதம் வாழ்கிறோம்
உம் நேசம் கண்டு நாங்கள்
தினம் மகிழ்கிறோம்
நாதரே உம் வரவினால்
எம்முள்ளம் மலருதே ஷேகே
(ஷேகே)

பாடல் :
நாகூரே மஜீத் ( நீதிமன்றம்),
எம், ஏ. லாபிர்,
அக்கரைப்பற்று

கவியாக்கம் :
கவிஞர் பாலமுனை பாறூக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *