Archives

குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

இன்ஷா அல்லாஹ்

காலம் : 26.11.2016 சனிக்கிழமை

ஸபர் பிறை 26 அஸர் தொழுகைக்குப் பின் பி.ப. 04.00 மணி தொடக்கம் 06 மணி வரை (பிறை FM நிகழ்வு) நடைபெறும்,

இடம் : மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்

நிகழ்வுகளில் தலை சிறந்த மார்க்க உலமாக்களான,

  1. மெளலவி ஏ.கே.நழீம் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை அதிபர்) அவர்கள்.
  2. மெளலவி ஏ.சீ.எம். நிஷாத் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை உப அதிபர்) அவர்கள்.
  3. மெளலவி ஏ.ஆர்.ஸபா முஹம்மத் (நஜாஹி)  காதிரி-(பாத்திமத்துஸ் ஸஹறா அறபுக் கல்லூரி அதிபர்- கல்முனை) அவர்கள்.
  4. மெளலவி எம்.ஆர். றிமாஸ் (மஹ்ழரி)-(கல்முனை மஸ்ஜிதுர் ரய்யான் பேஷ் இமாம்) அவர்கள்

ஆகியோரால் சன்மார்க்க உபந்நியாசம் நிகழ்த்தப்படும்.

குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் நாயகம் வபாத்தான மஃரிபு நேரத்தில் கத்முல் குர்ஆன் தமாம் மற்றும் நாட்டின் சுபீட்சத்துக்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

இடையிடையே இஸ்லாமிய பாடல்கள் நூறுல் இர்ஃபான் மாணவர்கள் மற்றும் தரீக்கா முரீதீன்களால் நிகழ்த்தப்படும்.