Archives

அக்கரைப்பற்று அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலத்திற்காக குத்புனா மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் இயற்றிய பாடசாலைக் கீதம்

ஏகனே உன்னைப் போற்றினோம்-எங்கள்
ஏந்தல் வழியில் சேரவே
கல்வியில் நாம் ஓங்கிட- உந்தன்
கருணை தந்தெம்மைக் காருமே
(ஏகனே)

முத்து நிகர் கலைக்கூடமே
முனவ்வறா கனிஷ்ட கல்லூரி
கல்வி தரும் அரசாங்கமும்,
கலை ஆசான், அதிபர், பெற்றோர்களும்
காலம் முழுதும் வாழவே-இரு
கைகளை நாம் ஏந்தினோம்
(ஏகனே)

பாலர் எங்கள் மனதிலே-நற்
பண்புகள் மலர்ந்தோங்கவே
வாட்டும் துயரம் நீங்கிடும்
வளமான கல்வி சேரவே
மாட்சிமை தரும் வாழ்வினை-இளம்
மாணவர் நாம் வேண்டினோம்
(ஏகனே)

ஒற்றுமை உணர்வோடு நாம்
ஒரு தாயின் மக்கள் போலவே
சாதி, மத பேதங்கள் அற்று
சாந்தமாய் நாம் வாழவே
சீர் பெற எம் நாட்டு மக்கள்
சிறப்புற நாம் வேண்டினோம்
(ஏகனே)

ஸல்லல்லாஹு  அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு  அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு  அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

-நன்றி : ஆசிரியர் : எம்.எம்.எம்.முனாஸ், திருகோணமலை-

 

 

யா குத்பா மாலை

யாகுத்பா மாலை

(ஷெய்க் இஸ்மாயீல் அவர்களின் புதல்வர் அப்துஸ்ஸமத் ஆலிம் ஸாஹிப் அவர்கள் பாடியது)

அல்ஹம்து லில்லாஹிஹம் த ன் தாயி தமன்அபதா
வஷ்ஷுக்று ஷக்றன்கஸீ றன்வாஸி பன்றகதா
தும்மஸ்ஸ லாத்து அலா வாகில் அனாமிறதா
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயி பித்தீனி

அல்ஹம்து லில்லாஹியெப் புகழாதி யொருவனுக்காம்
நல்லதிக ஷுக்றுஞ்சிறப் பும்நாய னொருவனுக்காம்
சொல்லெந்த நாள்ஸலவாத் திறைதூதர் நபிதமக்காம்
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயிபித்தீனி

யாகுத்ப அஹ்லிஸ்ஸமா வல் அற்ளி கவ்ஸஹுமா
பாபைன ஐனைஉஜூ தைஹிம்வ கைஸஹுமா
எப்னல் அலிய்யைனிகது அஹ்றஸ்த இற்ஸஹுமா
யாகைற மன் கானயுத் ஆமுஹ்யி யத்தீனி

வானோர்க்கும் புவியோர்க்குமே வருங்குதுபு ஆதாரமே
தானீர்ப திக்கீருஜு தாய்வந்த தாபரமே
தீனின்பு லியலிஈர் பாலர்கள் பேரருமே
தானந்த ஈறாந்ததெரங் கும்முஹ்யி யத்தீனே

யாகவ்ஸுல் அஃளமுகுல் லத்தஹ்றி வல்ஹீனி
அஃலரவ லிய்யின்பிதஹ் கீமின்வ தம்கீனி
அவ்லாப கீரின் இலல் மவ்லாவ மிஸ்கீனி
அந்த்தல்ல ஸித்தீனுஸம் மாமுஹ்யி யத்தீனி

எக்கால மெந்நேரமும் கவ்ஸென்னும் பேருடையோர்
ஹக்கான வலிமாரக்குமே லாம்பரான வலியெனவோர்
மிக்காத ரிப்போர்களின் மிகவிரப்பையு முடையயோர்
தக்காத்த ருள் நாமநா ளும்முஹியி யத்தீனே

வகது அதாக்ககிதா புல்லாஹி முஸ்த்தமிஆ
யாகவ்ஸு அஃளமுகுன் பில்குற்பி முஜ்ததமிஆ
அந்தல்க லீபத்துலீ பில்கவ்னி முல்த்தமிஆ
ஸும்மீத்த பிஸ்மின் அளீ மின்முஹ்யி யத்தீனி

தந்தை தாய் தாரம் சந்ததியு மில்லானைச்
சொந்தமுடன் காட்சி பெற்ற தூதரங்கர் யாநபியே

யாமன்த்த பஜ்ஜறத்தில் அன்ஹாறு நாபிஅத்தன்
மின் இஸ்ப ஐஹிபறவ் வல்ஜைஷ பில்ததி

வாகாய் விரல்களிலே வரவழைத்த நன்னதியால்
தாகங்க டீர்த்து வைத்த தாஹா ரஸுல் நபியே
மறுமையிலே வருந்தாகம் வருத்த மெல்லாம் உங்களுட
கருணையால் மாற்றிவைப்பீர் ஹாமீன் ரஸுல் நபியே

இன்னி இதாமஸ்ஸனீ லைமுன்யு றவ்விஉனீ
அக்கூலு யாஸையிதஸ் ஸாதாத்தி யாஸனதீ

திடுக்கமா யெனை நோக்கித் தீண்டுகின்ற தங்கடங்க
ளிடுக்கந் தனிலுஞ் சொல்வே னென் ஸையிதீநபியே
ஸாதாத்துக ளானவருக்கு ஸையிதே யென் ஸனதீ
ஆதரவாய் வந்துதித்த அஹ்மதுவே யாநபியே

குன்லீ ஷபீ அன்இலர் றஹ்மானி மின்ஸலலீ
வம்னுன் அலையபிமா லாக்கான பீகலதீ

எளியேன்றான் செய்பிழையை யிறையோனுந் தான் பொறுக்கத்
தெளிவான மன்றாட்டஞ் செய்வீர்கள் யாநபியே
நித்திய சுகம் பெறவே நேசமா யென்பேரில்
முத்திதந் தருள்வீர்கள் முஹம்மதுவே யாநபியே

வன்லுறுபி ஐனிர்ரிலா லீ தாயி மன் அபதா
வஸ்துறுபி தவ்லிக்கத்தக் ஸீரி மதல் அமதி

மாறாம லெப்பொழுது மகிழ்ச்சியா யென்னளவில்
நேர்பொருந்துங் கண்ணாலே நீர் பாரும் யாநபியே
உங்கள் மகிமை கொண்டே யூழிநாட்செய்பிழையாற்
பங்கப் படுத்தாமற் பலன் தருவீர் யாநபியே

வஃதிபு அலையபி அபு வின்மிக்க யஷ்மலுனீ
பஇன்னனீ அன்கயா மவ்லாய லம் அஹிதி

உங்களில் நின்று முள்ள உகப்பான பொறுக்குதல்தா
ளெங்களைப் பொதிந்து கொள்ள விரங்குவீர் யாநபியே
கருந்தரே யும்மை யன்றிக் காண்கிலே ளென்றெனக்குப்
பெருத்த பிழை பொறுத்துப் பேணுவீர் யாநபியே

இன்னீத்த வஸ்ஸல்த்துபில் முக்த்தாரி அஷ்ரபிமன்
றகஸ் ஸமாவாத்திஸிர் ரில்வாஹி தில் அஹதி

தாகமாய் வான் கடந்து ஷறபான அறுஷளவில்
வாஹிதா யிருக்கும் றப்பை வசனித்த யாநபியே
எனக்கு தவியான நல்ல வின்பமுள்ள வஸீலாவே
மனக்கவலை தீர்க்கு மெங்கள் வள்ளலே யாநபியே

றப்புல் ஜமாலித்தஆ லல்லாஹூ காலிகுஹு
பமிதுலு ஹூபீஜமீ இல்கல்கி லம் அஜிதி

ஜமாலுள்ள றப்பு உம்மைத் தன்னொளிவாற் றானவைத்தான்
கமால் முழுதும் பெற்றுவந்த காரணரே யாநபியே
உங்கள்போ லொருபடைப்பை யுடையோன் படைக்கவில்லை
யெங்கணபி யாகவந்த ஏற்ற முள்ள யாநபியே
கைரில் கலாயிக்கி அஃலல்முறுஸ லீன துறா
ஸுகுரில் அனாமிவஹா தீஹிம் இலர் றுஷுதி

முறுஸலீ னானவர்க்கு முன்னான அஹ்மதுவே
நெறியளவில் வழிகாட்டும் நீதரே யாநபியே
எல்லாப் படைப்புகட்கு மேற்ற முள்ள தங்கரிப்பே
நல்ல வழி காட்டும் நாயகரே யாநபியே

பீஹில்த்த ஜஃத்துல அல் லல்லாஹ யக்பிறுலீ
ஹாதல்லதீ ஹுவபீ ளன்னீவ முஃத்த கதீ

அல்லாஹு வென்பிழையை அன்பாய்ப் பொறுப்பதற்கே
யல்லும் பகலுமுங்க ளாதரவே யாநபியே
இப்படியே யென்னுடைய விருதயத்தில் நல்லுறுதி
தப்பாம லென்றெனக்கு தந்தருள்வீர் யாநபியே

பமதுஹு ஹூலம் யஸல் தஃபீ மதாஉமுரீ
வஹுப்புஹு இன்தறப் பில் அற்ஷி முஸ்த்தனதீ

உயிருள்ள நாளளவு முங்கள் புகழ்மதுஹால்
கைர் பெருகத் தந்தருளும் காத்திம் றஸூல் நபியே
அறுஷுடைய றப்பான அல்லாவின் திருமுகத்தைப்
பிரிசமுடன் கண்காட்சி பெற்றோரே யாநபியே

அலைஹி அஸ்க்கா ஸலாத் தின்லம்ய ஸல் அபதா
மஅஸ் ஸலாமிபிலா ஹஸ்ரின் பிலா அததி

மட்டு திட்ட மெண்ண மன்றி மன்னான் ஸலா முடனே
இஷ்டஸல வாத்துமக்கே யிறைகிருபை யாநபியே
எக்காலமு மகாவிந்த ஏற்றமுள்ள ஸலவாத்து
ஹக்காக வந்திறங்கும் ஹாதிற ஸூல் நபியே

வல்ஆலி வஸ்ஸஹ்பி அஹ்லில் மஜ்தி காத்திபத்தன்
பஹ்ரிஸ் ஸமாஹிவ அஹ் லில்ஜூதி வல்மததி

கொடைமிகுந்த ஆள்களுக்குங் குதுபான தோழருக்கு
முடையோன் கிருபையுண்டா முதவிசெய்வீர் யாநபியே
எடுத்துப் படிப்பவருக்கு மின்பமாய்க் கேட்பவருக்குந்
தொடுத்தோ ரனைவருக்குந் துணை செய்வீர் யாநபியே

ஸும்மஸ் ஸலாத்து அலா கைரில் பரிய்யத்திமன்
அத்தா இலைஹிபிவஹ் யில்லாஹீ ஜிபுரீலு

நாயகன் மலக்கான நலமான ஜிபுரீலு
ஆயும் வஹீசெலுத்தும் அஹ்மதுவே யாநபியே
ஹக்கன்ஸல வாத்துநித்தம் கைறான யாநபியே
முக்கியமா யுங்களுக்கு மொழிகிறோம் யாநபியே
பைலுஸ் ஸலாத்தி அலா கைரில் ஹுதாத்திஜறா
மாலஃல அல்பறுகுமின் ஆபாகி னஜ்மாஇ

வானின் திசையில் நின்றும் வழங்குமின்க லுள்ள மட்டும்
மானின் பிணை நபியே மகிமையுங்கட்கே நபியே
உற்றஸலவாத்தி னுகந்தபை லானதுவை
யற்ற மன்றி யுங்களுக்கே யருள்கிறோம் யாநபியே

தனதாக கண்காட்சி தாத்தொளிவைக் கண்டுவந்த
இனிதான நபிபேரில் இறையேஸலவாத் துரைப்பாய்
சிறப்பான கஃபாவில் தெளிவாக வந்து தித்த
நிறப்பமுள்ள முஹம்மதுவே நெறிநேச ரேநபியே

மலக்கான ஜிபுரீலு மகிமைநா வுரைத்த கவி
துலக்கமாய்ப் படிப்பவர்க்குத் துய்யோன் றஹுமத் துண்டாம்
துய்யோன் முஹம்மதுவின் துலங்கும் றவுலா மதிலின்
மெய்யா யெழுதப்பட்ட விளங்குங்கவி நற்பொருளே.

யாறப்பி ஸல்லி அலா மன்ஹல்ல பில்ஹறமி
தாஹர்ற ஸூலல்லதீ கதுகுஸ்ஸ பில்கறமி.

( 118. ஆதாரம் : யாகுத்பா மாலை, பக்-03,04,05,06).